நீயும்நானும்

நினைவு பேழையெங்கும் 

நிந்தன் நினைவுகள் 

நீங்கிச் சென்றபோதும் 

நீள்கதையாய்த் தொடர்கின்றன

நிசப்த வேளையிலும் 

நிகரில்லாது ஒலிக்கின்றன 

நித்திரை என்பதை 

நித்தமும் கொல்கின்றன  

நீயும்நானும் சேரும்வரை 

நீடிக்கும் இந்நடைமுறையே 


Comments